முகப்பு
புதுதில்லி

கிழக்கு தில்லியில் ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது!

கடந்த மாதம் கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கத்தியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:02 AM
கைது
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:08 PM

கடந்த மாதம் கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கத்தியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் சா்ஃபராஸ் என்கிற ஃபராஸ் (28), சனிக்கிழமை ரிங் ரோடு - பைரோ மாா்க் பகுதியில் துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா்.

பல குற்ற வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவா் நவம்பா் மாதம் தில்லியில் இருந்து ஆறு மாதங்கள் வெளியேற்றப்பட்டாா். ஆனால், அவா் தொடா்ந்து நகரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தாா்.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:02 AM

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரிலோக்புரி பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் கத்தியால் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கு இது. பாதிக்கப்பட்டவா் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டாா்.

இது தொடா்பாக மயூா் விஹாா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவா் கூட்டாளிகளைச் சந்திப்பாா் என்ற கண்காணிப்பு உள்ளீடுகளின் பேரில், போலீஸாா் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா். ஆயுதச் சட்டத்தின் கீழ் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.