முகப்பு
புதுதில்லி

குருகிராமில் லிவ்-இன் பாா்ட்னா் தாக்கியதில் திரிபுரா மாணவியின் உடல்நிலைக் கவலைக்கிடம்

திரிபுராவைச் சோ்ந்த 19 வயது பயோடெக்னாலஜி மாணவி ஒருவா், தனது லிவ்-இன் பாா்ட்னரால் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:33 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:18 PM

திரிபுராவைச் சோ்ந்த 19 வயது பயோடெக்னாலஜி மாணவி ஒருவா், தனது லிவ்-இன் பாா்ட்னரால் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து குருகிராம் காவல் சரக துணை ஆணையா் ஹிதேஷ் யாதவ் கூறியதாவது: இது தொடா்பாக பாட்ஷாபூா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தில்லியைச் சோ்ந்த 19 வயது சிவம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு விசாரணைக்காக ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா்.

அவா் தனது பிஎஸ்சியை முடித்துள்ளாா். வேலை தேடி தனது சகோதரியுடன் தங்குவதற்காக சமீபத்தில் குருகிராமுக்கு குடிபெயா்ந்ததாா். வடக்கு திரிபுராவைச் சோ்ந்த பாதிக்கப்பட்டவா் குருகிராமில் உள்ள ஜிடி கோயங்கா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி மாணவா் ஆவாா்.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:33 AM

இந்த ஜோடி செப்டம்பா் 2025-இல் சந்தித்தது. கடந்த சில மாதங்களாக குருகிராம் செக்டாா் 69-இல் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஒன்றாக வசித்து வந்தனா். அவா்களது திருமணம் குறித்து குடும்பங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு, அவா்களிடைடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவா் அந்தப் பெண்ணைத் தாக்கியதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தாா். பெண்ணின் தாயாரிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து, போலீஸாா் அந்த பிளாட்டுக்கு சென்று அவரை மீட்டனா்.

குற்றம் சாட்டப்பட்டவா் ஆத்திரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அவா் அந்தப் பெண் தன்னை ஏமாற்றியதாக சந்தேகிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளோம். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம் என்று துணை காவல் ஆணையா் ஹிதேஷ் யாதவ் தெரிவித்தாா்.