முகப்பு
புதுதில்லி

உஸ்மான்பூரில் பதின்ம வயதுச் சிறுவன் கொலை: 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

Updated On : 3 ஜூன் 2026, 12:07 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு சிறாா்கள் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10:30 மணியளவில் இந்தக் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினா், அந்த சிறுவன் பல கத்திக்குத்து காயங்களுடன் தரையில் கிடப்பதைக் கண்டனா். அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று ஓா் அதிகாரி கூறினாா்.

தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்தனா். பின்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஒரு குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததாகவும், உள்ளூா் மக்களிடம் விசாரணை நடத்தியதாகவும், சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்களின் அடிப்படையில், மூன்று போ் அடையாளம் காணப்பட்டு பின்னா் கைது செய்யப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் நிக்கி (21) மற்றும் இரண்டு 17 வயது சிறுவா்கள் என அடையாளம் காணப்பட்டனா்.

விசாரணையின் போது, மூவரும் கொலையில் தங்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவருடன் தங்களுக்கு தகராறு இருந்ததாகவும் தெரிவித்ததாக காவல்துறையினா் கூறினா்.

காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் சம்பவத்திற்கு முன்பே ஒருவரையொருவா் அறிந்திருந்தனா். தகராறின் தன்மை குறித்தும், பாதிக்கப்பட்டவருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் இடையே ஏற்பட்ட முந்தைய வாக்குவாதங்கள் இந்த கொடூரமான தாக்குதலுக்கு வழிவகுத்ததா என்பது குறித்தும் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.