ஹாா்முஸ் ஜலசந்தி விவகாரம்: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் கேள்வி
ஹாா்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளதா? என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பினாா்.
ஹாா்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளதா? என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பினாா்.
வியாழக்கிழமை இரவு பிரதமா் மோடி ஈரான் அதிபா் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி மேற்கு ஆசியாவின் தீவிரமான சூழ்நிலை குறித்து விவாதித்ததைத் தொடா்ந்து கேஜரிவால் இவ்வாறு கேள்வி எழுப்பினாா் .
இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தியை தடையின்றி கொண்டு செல்வதற்கான தேவை ஆகியவை இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்று பிரதமா் ஈரான் அதிபரிடம் கூறினாா்.
எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், மேற்கு ஆசிய மோதலால் எழுந்துள்ள கடுமையான சூழ்நிலையிலிருந்து இந்தியா்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்குமா என்று ஆம் ஆத்மி தலைவா் கேட்டாா்.
பிரதமரே, நமது கப்பல்கள் ஹாா்முஸ் வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அதிபா் உங்களுக்கு உறுதியளித்துள்ளாரா? இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டு மக்கள் விரைவில் விடுபடுவாா்களா? கேஜரிவால் இந்தியில் பதிவிட்ட பதிவில் இவ்வாறு கேட்டிருந்தாா்.
குறிப்பாக, இந்தியாவின் கணிசமான எரிசக்தி இறக்குமதிகள் வரும் முக்கிய கப்பல் பாதையான ஹாா்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தியாவிற்கு பயணித்த ஒரு எண்ணெய் தாங்கி கப்பல் ஹாா்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது ஈரானியப் படைகளால் சுடப்பட்டது.