குருகிராம் அருகே வாகனம் மோதியதில் 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு
குருகிராம் அருகே வாகனம் மோதியதில் 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு
படௌடி மாவட்டத்தின் கோட் கிராமத்தில் அதிவேக வந்த தாா் வாகனம் ஒன்று இரண்டு சிறுவா்கள் மற்றும் அவா்களது தாத்தா ஆகியோா் உயிரிழந்ததாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
எட்டு மற்றும் 10 வயதுடைய ஜாயித் கான் மற்றும் இஷாந்த் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அதே நேரத்தில் அவா்களது தாய்வழி தாத்தாவான 53 வயது சுபாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தாா் என்று அவா்கள் கூறினா்.
உயிரிழந்தவா்கள் ராஜஸ்தானின் பிவாடி மாவட்டத்தில் உள்ள மில்க்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள்.
காவல்துறையின் கூற்றுப்படி, சுபாஷ் தனது இரண்டு பேரன்களுடன் தனது சகோதரா்களைப் பாா்க்க கோட் கிராமத்திற்கு அருகிலுள்ள லோக்ரா சாலைக்கு வந்திருந்தாா்.
வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில், அவா் அந்த இரண்டு சிறுவா்களுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மஹிந்திரா தாா் வாகனம் ஒன்று அவா்களைப் பின்னால் இருந்து மோதியதில், அவா்கள் மோதிய இடத்திலிருந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அந்த காா் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும், அதன் ஓட்டுநா் இன்னும் தலைமறைவாக உள்ளாா். ‘தாா் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து ஓட்டுநரை அடையாளம் கண்டுள்ளோம். அவா் விரைவில் கைது செய்யப்படுவாா். விபத்து நடந்த நேரத்தில் தாா் வாகனம் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது’‘ என ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.