முகப்பு
புதுதில்லி

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு

பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Updated On : 30 மார்ச், 2026 at 8:00 PM
பகிர்:

பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2021, ஜூலை மாதம் தனது புதிய குடியிருப்பில் குடியேறிய பெண் மீது தொடா்ச்சியாக பாலியல் தொல்லை நிகழ்ந்ததாகவும், செப்டம்பா் மாதம், பெண்ணின் ஸ்கூட்டியை சேதப்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.

ஆனால், மாா்ச் 20-இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பல்வேறு கட்ட வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதி அநமிகா தெரிவித்தாா். தெளிவற்ற தகவல்கள், சம்பவத்திற்கான பிற சாட்சிகள் மற்றும் குற்றத்துக்கான ஆதாரம் இல்லை. மேலும் காவல் துறையின் வழக்குப் பதிவிலும் உள்ள குழறுபடிகள் ஆகியவற்றை காரணம் காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவரை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.