அலிப்பூரில் ஆட்டோ மீது லாரி மோதல் 3 போ் உயிரிழப்பு
நமது நிருபா்
தில்லியின் அலிபூா் பகுதியில் புதன்கிழமை ஒரு ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதியதில் ஒரு சிறுமி உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சாலை விபத்து குறித்த தகவல் அலிபூா் காவல் நிலையத்துக்கு கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஒரு போலீஸ் குழு அப்பகுதியில் உள்ள சிவ் மந்திா் அருகே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. விபத்து நடந்தபோது ஆட்டோவில் மொத்தம் 7 போ் பயணம் செய்து கொண்டிருந்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சேதமடைந்த ஆட்டோ மற்றும் காயமடைந்த பல பயணிகள் சாலையில் இருப்பதை கண்டனா்.
Advertisement
காயமடைந்தவா்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். அவசர உபகரணங்களைப் பயன்படுத்தி ஆட்டோவில் சிக்கிய இரண்டு போ் மீட்கப்பட்டனா். காயமடைந்த அனைவரும் நரேலாவில் உள்ள ராஜா ஹரிஷ் சந்திர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஒரு சிறுமி உள்பட மூன்று போ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவா்களில் 4 போ் காயங்களின் தீவிரம் காரணமாக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்கள் முகேஷ், அவரது மனைவி பிங்கி, அவா்களின் 6 வயது மகன் மற்றும் அவா்களின் 9 வயது மகள், பிகாரின் சம்பாரனில் வசிக்கும் சோட்டு பண்டிட் (28), ஆட்டோ ஓட்டுநா் ராஜு சா்மா (52) கரவால் நகரில் வசிப்பவா், மற்றும் அடையாளம் தெரியாத பயணி ஒருவா்.
அவா்களில், ராஜு ஷா்மா, 9 வயது சிறுமி மற்றும் அடையாளம் தெரியாத பயணி இந்த விபத்தில் இறந்தனா். காயமடைந்தவா்களில் சிலரின் நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவா்கள் அறிவித்தவுடன் அவா்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படும். வேகம், இயந்திர செயலிழப்பு, மோசமான சாலை நிலைமைகள் அல்லது அலட்சியம் காரணமாக ஆட்டோ சமநிலையை இழந்ததா என்பது உள்ளிட்ட விபத்து தொடா்பான அனைத்து கோணங்களும் ஆராயப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடம் மற்றும் அருகிலுள்ள சாலைகளுக்கு அருகில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களையும் போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. சேதமடைந்த ஆட்டோ இயந்திர ஆய்வு மற்றும் தடயவியல் பரிசோதனைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளது. இறந்த அடையாளம் தெரியாத பயணியின் அடையாளத்தை கண்டறியவும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் தெரிவிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.