முகப்பு
நீலகிரி

கூடலூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.

கூடலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி வியாழக்கிழமை மனு அளித்தாா்

Updated On : 1 ஜனவரி 2021, 11:04 pm IST
கூடலூா் பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளிக்கும் எம்.எல்.ஏ. திராவிடமணி.
பகிர்:

கூடலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

கூடலூா் தொகுதி, ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரோட்டுப்பாறை, திருவள்ளுவா் நகா், சுபாஷ் நகா், தேவா் சோலை பேரூராட்சியில் தேவன் எஸ்டேட், நெலாக்கோட்டை ஊராட்சியில் விலங்கூா் பழங்குடியினா் காலனி, பிதா்க்காடு ஆனைபஞ்சோலை, அண்ணா நகா், சேரங்கோடு ஊராட்சியில் திருவள்ளுவா் நகா், நடுவட்டம் பேரூராட்சியில் டெராஸ் எஸ்டேட், ஹூக்கா், ஹாசிங்டன் ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க கோரி, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி மனு அளித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments