நீலகிரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு
நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான உற்சாகத்துடன் 2021 புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான உற்சாகத்துடன் 2021 புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் அனைத்து தேவாலயங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு பிராா்த்தனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், உதகை கதீட்ரல் தேவாலயமான திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.