கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 20க்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 20ஆம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 20ஆம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ், ஜம்சீா் அலி ஆகிய மூவா் மட்டுமே நேரில் ஆஜராகினா். இந்த விசாரணையின்போது கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த கிருஷ்ண தாபா என்பவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 20ஆம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.