புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - சுப.உதயகுமாரன்; பக்.104; ரூ.75; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - சுப.உதயகுமாரன்; பக்.104; ரூ.75; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியாக அறியப்பட்டிருக்கும் சுப.உதயகுமாரன், தனது 21 வயதில் எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து ஆறாண்டுகள் அங்கே வாழ்ந்த அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார்.
எத்தியோப்பியாவில் அப்போதிருந்த ஜனநாயகமற்ற ஆட்சியின் கொடுந்தன்மைகள், மக்கள் பட்ட பாடுகள் எல்லாவற்றையும் நூல் விவரித்துச் செல்கிறது.
ஒரு நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு நூலைப் படிக்கும்போது எழுகிறது. ஒரு கம்யூனிச அனுதாபியாக எத்தியோப்பியாவுக்குச் சென்ற சுப.உதயகுமாரன், ஆறாண்டுகள் அங்கிருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது, ""ராணுவ ஆட்சி, இந்தியாவின் இன்னல்களுக்கு மாற்றாக இருக்குமோ என்று நினைத்திருந்த நான், நமது சனநாயக ஆட்சி அமைப்பை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்ற வைராக்கியத்தைப் பெற்றேன். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எப்படி ஒரு நரக அனுபவமாக இருக்கும் என்பதை அனுபவித்த காரணத்தால், இவற்றைக் காப்பாற்ற எதுவும் செய்யலாம், செய்ய வேண்டும் என உறுதி பூண்டேன்'' என்று கூறுகிறார்.
""வாழ்வில் தகராறுகளே இல்லாமல் பெறப்படுவதல்ல சமாதானம், மாறாக அவற்றை எப்படிக் கையாள்வது எனும் திறமையிலிருந்து கிடைப்பதுதான் அது'' என்று அவர் சொல்வது இந்நூலின் சாரத்தைக் கூறுவதாக உள்ளது. சிறந்த நூல்.