முகப்பு
நூல் அரங்கம்

தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம்

ஏழு அகத்திணைகளையும் அறிவியல் நோக்கில் வரைபடமாக்கியும் காட்டியுள்ளார்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம்; முனைவர் பொ.நா.கமலா; பக்.830; ரூ.850; காவ்யா, சென்னை-24; ✆ 044-2372 6882.

தொல்காப்பியத்தை அமைப்பியல் நோக்கில் விளக்கியிருக்கும் இந்நூலாசிரியர், 6 கட்டுரைகள் மூலம் சுமார் 31 தலைப்புகளில் அதனைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அகத்திணையியலில் 'திணை' என்பது நிலம் எனும் பொருளில் தொல்காப்பியத்தில் கையாண்டுள்ளதைக் கூறும் நூலாசிரியர், ஒழுக்கத்தையும் திணை குறிப்பிடுவதை நூற்பாக்களை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். ஏழு அகத்திணைகளையும் அறிவியல் நோக்கில் வரைபடமாக்கியும் காட்டியுள்ளார்.

'சங்கப் போர்க்குரிய படைக்கலன்கள்' எனும் தலைப்பிலான உள்ளடக்கத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த காலத்தில் தொல்காப்பியம் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியில் தொல்காப்பியத்தின் நோக்கம் அப்போதைய மக்களது புறவாழ்க்கையை விளக்குவதுடன், அதற்கான கோட்பாடுகளை வகுத்துரைப் பதுமாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியாக நூலெங்கும் புதிய புதிய நோக்கில் ஆய்வுத்தளங்களுக்கான கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. தொல்காப்பியரின் பருந்துப்பார்வை உள்ளிட்ட பல தலைப்புகளில் உள்ளடக்கங்கள் நவீன கால முறையில் அறிவியல் நோக்கில் தொல்காப்பியத்தை நூலாசிரியர் அணுகியிருப்பதை விளக்குவதாக உள்ளன. ஏற்கெனவே உள்ள தொல்காப்பிய ஆய்வு நூல்களிலிருந்து இந்நூலை இத்தகைய அணுகுமுறை தனித்துவப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.

தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம்; முனைவர் பொ.நா.கமலா; பக்.830; ரூ.850; காவ்யா, சென்னை-24; ✆ 044-2372 6882.

தொல்காப்பியத்தை அமைப்பியல் நோக்கில் விளக்கியிருக்கும் இந்நூலாசிரியர், 6 கட்டுரைகள் மூலம் சுமார் 31 தலைப்புகளில் அதனைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அகத்திணையியலில் 'திணை' என்பது நிலம் எனும் பொருளில் தொல்காப்பியத்தில் கையாண்டுள்ளதைக் கூறும் நூலாசிரியர், ஒழுக்கத்தையும் திணை குறிப்பிடுவதை நூற்பாக்களை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். ஏழு அகத்திணைகளையும் அறிவியல் நோக்கில் வரைபடமாக்கியும் காட்டியுள்ளார்.

'சங்கப் போர்க்குரிய படைக்கலன்கள்' எனும் தலைப்பிலான உள்ளடக்கத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த காலத்தில் தொல்காப்பியம் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியில் தொல்காப்பியத்தின் நோக்கம் அப்போதைய மக்களது புறவாழ்க்கையை விளக்குவதுடன், அதற்கான கோட்பாடுகளை வகுத்துரைப் பதுமாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியாக நூலெங்கும் புதிய புதிய நோக்கில் ஆய்வுத்தளங்களுக்கான கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. தொல்காப்பியரின் பருந்துப்பார்வை உள்ளிட்ட பல தலைப்புகளில் உள்ளடக்கங்கள் நவீன கால முறையில் அறிவியல் நோக்கில் தொல்காப்பியத்தை நூலாசிரியர் அணுகியிருப்பதை விளக்குவதாக உள்ளன. ஏற்கெனவே உள்ள தொல்காப்பிய ஆய்வு நூல்களிலிருந்து இந்நூலை இத்தகைய அணுகுமுறை தனித்துவப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →