வாக்காளர் உரிமைச் சட்டம்
வாக்காளர் உரிமைச் சட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்க இந்த நூல் முற்படுகிறது. இதற்காக வாக்காளர்களுக்குப் பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
வாக்காளர் உரிமைச் சட்டம்-எம்.எஸ்.விசாலாட்சி; பக்.214; ரூ.220; மணிமேகலை பிரசுரம், சென்னை-600017, ✆ 044- 2434 2936.
வாக்காளர் உரிமைச் சட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்க இந்த நூல் முற்படுகிறது. இதற்காக வாக்காளர்களுக்குப் பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
'நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க ஒவ்வோர் வாக்காளரும் கடமைப்பட்டுள்ளோம். அரசுத் துறைகளை நஷ்டத்தில் இருந்து மீட்கும் ஆட்சியை அமைக்க வாக்காளர்கள் முன்வர வேண்டும். அரசு உடைமைகள் விற்கப்படக் கூடாது' என்று நூலில் உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர்கள் அனைவரும் இதை நினைவில் கொள்வது கட்டாயம்.
Advertisement
'நாட்டில் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவு. 130 கோடி மக்கள் உள்ள இடத்தில் சில லட்சத்தில் வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தருகிறது' என நூலில் இடம்பெற்றுள்ள சில விமர்சனங்கள் கவனித்தக்கவை.
'நமது சட்டம் அடிப்படை உரிமைகள், கடமைகள் என இயற்கை வளத்தைப் பாதுகாக்கச் சொல்கிறது. இதை முதலில் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று மற்றொரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ளுமா?
'நம் சட்டத்தில் வாக்காளர் உரிமைச் சட்டம் என ஒரு சட்டம் இல்லை. இல்லாத சட்டத்தை எப்படி உருவாக்குவது' எனக் கேள்வி கேட்கப்படுவதாகவும், 'வாக்காளர்களுக்கான இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தாண்டி வேறு புதிய சட்டம் எதற்கு' எனக் கேட்கப்படுவதாகவும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகள் சரியா, தவறா என்பதைத் தாண்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.