முகப்பு
நூல் அரங்கம்

சிலப்பதிகாரம் எளிய உரை

இத்தகைய சிறப்பு வாய்ந்த காப்பியத்தை எளிமைப்படுத்தி தர முற்பட்டிருப்பது இளைய தலைமுறையிடம் சிலப்பதிகாரத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியாகும்.

Updated On : 9 மார்ச், 2026 at 12:42 PM
பகிர்:

சிலப்பதிகாரம் எளிய உரை - கலைமாமணி கு.கணேசன்; பக்.432; ரூ.450; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 021, ✆ 93805 30884.

சேர இளவல் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியமாகும். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சுற்றி வரும் காப்பியம் என்பது மட்டுமல்லாது பிற மொழி இலக்கியங்களைத் தழுவாமல் எழுதப்பட்ட காப்பியம் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழின் இரட்டைக் காப்பியங்கள் என்று போற்றப்படுகின்றன.

சிலப்பதிகாரத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இதுகாறும் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் ச.வே.சுப்பிரமணியன், புலியூர் கேசிகன், புலவர் தமிழமுதன், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் எழுதிய உரைகள் குறிப்பிடத்தக்கவை.

Advertisement

இதுவரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட உரைகளைத் தழுவியே இந்நூல் எழுதப்பட்டது எனினும், அவற்றை எளிமைப்படுத்தி புதிய விளக்கங்கள் தரும் முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டுள்ளார்.

உலகம் தோன்றிய காலம் முதலே புராண, இதிகாச, காப்பியங்கள் போற்றப்படுகின்றன. அவை மண்ணுக்கேற்ப மாறுபட்டிருந்தாலும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது.

இளங்கோ அடிகள் தமிழுக்கு அளித்த சிலப்பதிகாரம் உலகத்து சிறந்த நூல்களில் ஒன்றாக அமைவதோடு, அவற்றுள் ஒளிமிக்கதாயும், தனிச் சிறப்பு வாய்ந்ததாகவும் விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காப்பியத்தை எளிமைப்படுத்தி தர முற்பட்டிருப்பது இளைய தலைமுறையிடம் சிலப்பதிகாரத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.