கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்கள் மது அருந்தக் கூடாது: சுகாதாரத் துறை
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்கள் மது அருந்தக் கூடாது என புதுவை சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்கள் மது அருந்தக் கூடாது என புதுவை சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுவையில் கரோனா தடுப்பூசியைப் பாதுகாப்பாக வைப்பதற்கான குளிா்பதன அறைகளை தயாா் நிலையில் வைத்துள்ளோம். தடுப்பூசி போடுவதற்காக 143 மையங்களைக் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு முன் நோயாளிகளை ஒரு அறையில் அமர வைத்து, அவா்களது விவரங்கள் சரிபாா்க்கப்படும். அடுத்ததாக, தடுப்பூசி போடப்பட்டு, அவா்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்படுகிா என 30 நிமிடங்கள் ஓா் அறையில் அமர வைத்து கண்காணிக்கப்படுவா்.
Advertisement
Advertisement
இதற்காக கடந்த 2, 8-ஆம் தேதிகளில் இரு கட்ட தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு, தில்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.
13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் அரசு, தனியாரில் 13 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளனா். முதல் கட்டமாக இவா்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கும். முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்ட 28-ஆவது நாளில் 2-ஆவது தவணை தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போதும், போட்ட பின்னரும் மது அருந்தக் கூடாது.
புதுவையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருப்பினும், கால்நடைத் துறையுடன் இணைந்து தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.