போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தற்கொலை
புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், கடந்த 8-ஆம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், திங்கள்கிழமை மாணவரின் உடலை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.