முகப்பு
புதுக்கோட்டை

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பேரணி

புதுகை நகராட்சியில் உள்ள காமராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:08 pm IST
பகிர்:

புதுகை நகராட்சியில் உள்ள காமராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், காமராஜர் பெயரில் கடந்த 50 ஆண்டுகளாக காமராஜபுரம் என அழைக்கப்பட்டுவரும் இப்பகுதியை கணேஷ்நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். நகர் நல மையத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியைத் தொடர்ந்து மாவட்ட

Advertisement

Advertisement

வர்த்தகர் கழகத்தலைவர்

சீனு. சின்னப்பா தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments