நாளை "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம்கள் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெற உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம்கள் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெற உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் "அம்மா' திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, ஆக. 23-ம் தேதி, கந்தர்வகோட்டை வட்டத்தில் மலையப்பட்டி, குரும்பூண்டி. அறந்தாங்கி வட்டத்தில் ஆமாஞ்சி. திருமயம் வட்டத்தில் கீழப்பனையூர். ஆவுடையார்கோவில் வட்டத்தில் கரூர். மணமேல்குடி வட்டத்தில் வெட்டிவயல். பொன்னமராவதி வட்டத்தில் ஆர். பாலக்குறிச்சி. ஆலங்குடி வட்டத்தில் குளவாய்ப்பட்டி, காயாம்பட்டி. குளத்தூர் வட்டத்தில் பேராம்பூர். இலுப்பூர் வட்டத்தில் தேராவூர் மற்றும் இருந்திராப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.