போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவல்துறை ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள்
புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்
கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.ஏ. உமா தலைமை வகித்தார்.
Advertisement
Advertisement
இதில் வாகன ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், விபத்துக்கான காரணங்கள், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களை தடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இதில், நகர துணைக் கண்காணிப்பாளர் செந்தில்வேல், தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரன், கணேஷ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் பி. தமிழ்மாறன், போக்குவரத்து வாகன ஆய்வாளர்
அனிதா மற்றும் அரசு போக்குவரத்து, தனியார் பேருந்து
ஓட்டுநர்கள், புதுகை மற்றும் கந்தர்வகோட்டை பகுதிகளை சேர்ந்த லாரி, வேன், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.