மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கு
இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், மழைநீர்
இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா. சின்னதம்பி தலைமை வகித்தார். தாளாளர் இராசி. உதயகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மு. தினேஷ்குமார் மழைநீர் சேகரிப்பு வழிமுறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து பேசினார்.
கருத்தரங்கில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வினோத் அய்யப்பன் வரவேற்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.