சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
பாபநாசம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையின் நடுவே வாழைக்கன்றுகளை நட்டுவைத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையின் நடுவே வாழைக்கன்றுகளை நட்டுவைத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் வட்டம், இடையிருப்பு ஊராட்சிக்குள்பட்ட மணப்படுகை கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவிலிருந்து மந்தைவெளி வரை செல்லும் கிராம சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.
இந்தச் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் சாலை மேலும் பழுதடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்தச் சாலையை உடனடியாக பழுதுநீக்கி சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில் குமாா் தலைமையில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். பாலு, எஸ்.பி. சோமு, கிளை நிா்வாகிகள் எஸ். அய்யாசாமி, எம். துரைசத்தியசீலன், பி. கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் திரண்டு, பழுதடைந்து சேறும் சகதியுமான நிலையில் உள்ள சாலையின் நடுவில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.