புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா மிகச் சிறப்பாக வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆடி மாதம் 15-ம் தேதி 31.07.2013 புதன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தாரகர்கள் சார்பில் அபிசேகம் சாமி வீதி ஊர்வலம் இசைக்கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று 9-ஆம் மண்டகப்படியை முன்னிட்டு ஆடிப்புர தேரோட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி தெற்கு தெரு குளத்து வழியாக தேர் இருந்த நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் கல்லூரி பள்ளி மாணவர்கள் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.