கோபாலகிருஷ்ணபாரதி 30-வது ஆண்டு இசைவிழா
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் இசை நிகழ்ச்சிகளில் பிறமொழிப்பாடல்கள் மட்டும் பாடப்பட்டு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் இசை நிகழ்ச்சிகளில் பிறமொழிப்பாடல்கள் மட்டும் பாடப்பட்டு வந்த காலத்தில் சிற்சில தமிழ்ப் பாடல்கள் கடினமான தமிழில்
பாடப்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கான பாடல்களைத் தமிழுலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை ஹடயோகியும், சித்த புருஷருமான கோபாலகிருஷ்ணபாரதியையே
சாரும்.
சிவனையே பாடிவந்த அந்த சிவனேசச் செல்வருக்கு சிவபதம் ஒரு சிவராத்திரியன்று அமைந்தது. அவரின் ஆராதனை தினம் மயிலாடுதுறை திரு.முரளி சாஸ்திரிகள் அவர்களின் இல்லத்தில் எதிர்வரும் 14.02.18 புதன்கிழமை அன்று நடைபெறும். அவரின் நினைவினைப் போற்றும் வகையில் 30-வது ஆண்டு இசைவிழா வரும் 2018 பிப்ரவரி 11, 12 ஆகிய தேகிதளில் நடைபெற உள்ளது. அனைவரும் இந்த இசைவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
நாள் - 11,12 பிப்ரவரி - 2018
இடம் - ஸ்ரீ சந்திரசேகரா ஹால், காமாட்சி பில்டிங், (சிட்டியூனியன் வங்கி மாடி), பட்டமங்கலம் தெரு, மயிலாடுதுறை