ஆன்மிகம்

திருப்பூர் ஸ்ரீ சித்தர் சபையில் ஆதிஅம்பலநாதர் அபிஷேக தரிசனம்

தினமணி

திருப்பூர் ஸ்ரீ சித்தர் சபையில் ஸ்ரீ ஞானம்பிகை சமேத சதாசிவநாதர் ஆலயத்தில் 02.01.18 செவ்வாய்க்கிழமை, அதிகாலை 4.00 மணி முதல் ஆதிஅம்பலநாதர் அபிஷேக தரிசனம் நடைபெறுகிறது. 

ஆதி அம்பலத்தில், திருவாதிரை தினத்தன்று தம்பதி சமேதமாக வந்து எல்லாம் வல்ல ஆதிஅம்பலநாதர் அபிஷேகம் தரிசனம் செய்து சித்தர்களின் குருவருளும் சதாசிவ நாதரின் திருவருளும் பெற்று சித்தர் சபையில் (சிவகரந்தை கற்பம் மூலிகை) பிரசாதம் பெற்று ஞானாம்பிகையின் திருவருள் பெற்று, திருமங்கல்ய கயிறும் மஞ்சள் குங்குமமும் பெற்று சதா சிவநாதர் திருவடிக்கு பாத்திரமாகும்படி
வேண்டுகிறோம். 

பத்ரகிரி சிவசுப்ரமண்ய தேவாலயத்தில் ஜீவசமாதி அடைந்த சற்குரு சுவாமிஜி அவர்களின் சித்தர் சபையில் வீற்றிருக்கும் சற்குரு பத்ரகிரி சுவாமிக்கும் 48-ம் நாள் மண்டல பூஜை 02.01.18 அதிகாலை முதல் நடைபெறுகிறது. 

பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆதிஅம்பலநாதர் அபிஷேக தரிசனமும்,  சற்குரு பத்ரகிரி சுவாமிஜியின் மண்டல பூஜையும் கண்டு மகிழுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT