திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தாண்டு ரெங்கநாதர், நம்பெருமாள், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர், நிர்வாக அதிகாரி ஆகியோர் தலைமையிலான குழவினர் கோயிலுக்கு எடுத்து வந்தனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் அவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.