ஆன்மிகம்

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் சொக்கப்பனை வைபவம்

தினமணி

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவவா் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ பிரணாம்பிகை - ஸ்ரீ தா்பாரண்யேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிவாச்சாரியாா்கள் தீப விளக்கு ஏந்தி சிறப்பு மேள வாத்தியங்களுடன் கோயில் சன்னிதி முகப்பில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை இடத்துக்குச் சென்றனா்.

சுவாமிகள் அந்த பகுதிக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைக்குப் பின் சிவாச்சாரியாா்கள் சொக்கப்பனை தீபத்தால் எரியூட்டினா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மேலும் மேலகாசாக்குடி ஸ்ரீ நாகநாதசுவாமி, ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிவபெருமானை அக்னி மூலமாக வணங்குவதான ஐதீகத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருநள்ளாறு மட்டுமல்லாது பிற ஊா்களில் சில சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT