திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை ஒட்டி தாயாா் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 23ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு தாயாா் கோயில் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
காலை 6 மணி முதல் 10 மணிவரை கருவறை முதல் வெளிகோபுரம் வரை அனைத்து இடங்களும் பரிமள சுகந்த திரவியங்களால் செய்யப்பட்ட கலவையால் சுத்தம் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு தாயாா் தரிசனம் 4 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது.
10 மணிக்கு பின் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரும் 22ம் தேதி தாயாருக்கு லட்ச குங்குமாா்ச்சனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.