செய்திகள்

"2017-இல் புனித அந்தோணியார் புதிய ஆலயத் திறப்பு விழா': இருநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ளலாம்

தினமணி

கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா, 2017 ஆம் ஆண்டில் இரு நாட்டு பங்குத் தந்தையர்களும், மீனவர்களும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என, இலங்கை நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் மேலும் கூறியது: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் முற்றிலுமாக புதிதாக 2600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதேநேரம், பழைய ஆலயத்தில் ஒரு சிறு கற்களைக் கூட பெயர்க்காமல் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்திய-இலங்கை மக்கள் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சீரற்ற காலநிலை நிலவுவதால், பெருந்திரளாக இருநாட்டு மக்களும் கலந்துகொள்வது கடினம். புதிய ஆலயத்தை கட்டுவதற்கு பங்களிப்பு செய்தவர்கள் இலங்கைக் கடற்படையினராவர். அவர்கள், மறைமாவட்டத்திடம் ஆலயத்தை ஒப்படைக்கும் நிகழ்வே இப்போது நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விலும், இந்தியாவிலிருந்து அருட்சகோதரிகளும், மீனவர்களும் என 20 பேர் பங்கேற்பதாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு அனுமதி அளித்த இந்திய அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
புதிய ஆலயத்தின் திறப்பு விழா 2017 ஆம் ஆண்டு நடத்தப்படும். ஆண்டுதோறும் இருநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ளும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும் நாளிலேயே, இரு நாடுகளின் மறைமாவட்ட ஆயர்களும், பக்தர்களும், மீனவர்களும் பங்கேற்கும் வகையில் திறப்பு விழாவையும் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT