படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் திருஅவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன். 
செய்திகள்

திருஅவதார அலங்காரத்தில் படைவீடு ரேணுகாம்பாள் அம்மன்

போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை திருஅவதாரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

DIN

போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை திருஅவதாரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
மேலும், அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவராத்திரி விழாவில் 10-ஆம் நாளான திங்கள்கிழமை ரேணுகாம்பாள் அம்மன் திருஅவதாரத்தில் (ரேணுகாம்பாள்) காட்சியளித்தார்.
இதில் வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி

வோடஃபோன் ஐடியா இழப்பு அதிகரிப்பு

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

SCROLL FOR NEXT