ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், தேன், இளநீரால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மகா சிவராத்திரியை ஒட்டி, இரவு 7 மணி முதல் 4 கால பூஜை நடைபெற்றது.
பிரதோஷத்தை ஒட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் கோயில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.