செய்திகள்

ராமேசுவரம் திருக்கோயிலில் நேபாள முன்னாள் பிரதமர் சுவாமி தரிசனம்

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நேபாள நாட்டு முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாசியா திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். 
ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாசியா ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்துக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அவர்களை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வரவேற்றார். அதன்பின்னர், அவர்கள் தனியார் விடுதியில் தங்கினர்.
திங்கள்கிழமை காலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அக்கினி தீர்த்தக் கரையில் புனித நீராடினார். பின்னர், கோயிலுக்குச் சென்ற பாபுராம் பட்டாசியாவுக்கு, கோயில் இணை ஆணையர் கோ.செ. மங்கையர்க்கரசி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்குப் பிறகு, அரிச்சல்முனை, கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டனர். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT