முகப்பு
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வீரராகவப் பெருமாள்.
செய்திகள்

வீரராகவப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு

செய்திகள்

வீரராகவப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வீரராகவப் பெருமாள்.
பகிர்:

வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 
சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோயிலின் மாடவீதிகளின் வழியாக பல்லக்கில் பவனி வந்தார். அதைத் தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது. மாலையில் விஜயகோடி விமானத்தில் வீரராகவர் வலம் வந்தார். திருமொழி சாற்றுமுறை, ரத்னாங்கி சேவை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இவ் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டு வீரராகவரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →