செய்திகள்

வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று ரத்னாங்கி சேவை

DIN


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (டிச. 6) ரத்னாங்கி சேவை உற்சவம் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 2 நாள்களில் ரத்ன அங்கி சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதத்தில் தேசிகர் சாற்றுமுறை உற்சவ நாளிலும், வைகுண்ட ஏகாதசி நாளிலும் நடைபெறும்.
அவ்வகையில், வியாழக்கிழமை கார்த்திகை மாத அனுஷம் நட்சத்திரத்தையொட்டி, தேசிகர் சாற்றுமுறை உற்சவம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விமரிசையாக நடைபெறவுள்ளது. அப்போது, வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி கவச உடை அணிந்து, பெருந்தேவி தாயாருடன் ஆழ்வார் பிரகாரம் வழியாக தாத தேசிகர் சந்நிதிக்குச் செல்வார். அதைத்தொடர்ந்து, ரத்னாங்கி சேவை உற்சவம் நடத்தப்படும். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT