செய்திகள்

பழனி மலைக்கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

DIN


பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், காத்திகை திருவிழா உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 

திருவிழா காலங்களில் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாகவே உள்ளது. அந்தவகையில், வார இறுதி நாளான நேற்று விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT