செய்திகள்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

தினமணி


திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கடைசி சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இக்கோயிலில் திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோபூஜை நடத்தப்பட்டது. கலசங்கள் அலங்கரிக்கப்பட்டு, யாக குண்டம் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சங்கு அலங்காரம், சங்குகளுக்கு பூஜை, யாகசாலை பூஜை, பக்தர்களுக்கு சங்கலபம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. 
பட்டு வஸ்திரத்தை யாக குண்டத்தில் இட்டு பூர்ணாஹுதியும், மஹாதீபாராதனையும் நடத்தப்பட்டன. இதையடுத்து கலசப் புறப்பாட்டு, கருவறையில் உள்ள வேதகிரீஸ்வரருக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவற்றை சிவாச்சாரியார்கள் நடத்தினர். 
அதைத் தொடர்ந்து, அவர்கள் யாக குண்ட பூஜைகளையும், சங்காபிஷேகத்தையும் நடத்தினர். மங்கல மேளதாள வாத்தியங்களுடன் நடைபெற்ற சங்காபிஷேகம், சங்கு பூஜை, யாக பூஜை ஆகியவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் குமரன், மேலாளர் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், நிர்வாகிகள், சிவனடியார்கள், இளைஞர்கள், பக்தர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT