செய்திகள்

கும்பகோணம் நாச்சியார் கோயிலில் உலகப் புகழ்பெற்ற கல்கருட சேவை

தினமணி


கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கோயிலில் அமைந்துள்ள, ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத, சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழித் திருவிழாவின் நான்காம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது. 

வேறு எங்கும் காண முடியாத உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ கல்கருட சேவை நாச்சியார் கோயிலில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ கல்கருட பகவான் தனது சன்னதியில் இருந்து மாலை 6.30 மணிக்கு அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளினார். 

பின்னர் இரவு 10 மணியளவில், ஸ்ரீகல்கருட பகவான் வாகனத்தில் சீனிவாச பெருமாளும், வெள்ளி அன்னப்பட்சி வாகனத்தில் வஞ்சுளவல்லி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் மின் விளக்குகள் அலங்காரத்துடன் சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர். 

- குடந்தை.ப.சரவணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT