இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:51 PM
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதைத் தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு.
இத்தலத்தில் மாசிப்பெருவிழாவானது பிப்ரவரி 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாகத் திருக்கல்யாணம் இன்று காலை வேத மந்திரம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
Advertisement
ஏராளமான பக்தர்கள் இத்திருமண விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை சிவாச்சாரியார்கள் செய்தனர்.