செய்திகள்

கடும்பாடி அம்மன் கோயில் தீமிதி விழா

தினமணி

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டையில் உள்ள கடும்பாடி அம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை தீமிதி விழா, அம்மன் வீதி உலா நடைபெற்றது.
 இக்கோயிலில் ஆடித் திருவிழா, செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விரதமிருந்து காப்பு கட்டியவர்கள் கரகம் எடுத்து கங்கை நீர் திரட்டி ஊர்வலமாக வந்தனர். பின்னர், தீமிதி விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் விரதமிருந்து வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தீ மிதித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த உற்சவர் அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT