நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு நாட்டின் நலன் கருதியும் பஞ்சம் தவிர்க்க வேண்டியும் காலத்தில் பருவ மழை பெய்ய வேண்டியும் விவசாயம், வியாபாரம் மற்றும் தொழில்கள் மேன்மையும் வளமும் பெறவேண்டியும் பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறவும் வேண்டி, பிரம்மோற்சவ பெரு விழா தொடங்கியது.
தினமும் அன்னவாகனம், பல்லக்கு, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் நடைபெறும். மேலும் ஜூன் 15 - கருட சேவையும், ஜூன் 18 மாலை திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து, ஜூன் 20 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நூதன திருத்தேர் உற்சவமும் நடைபெறும். ஜூன் 21- தீர்த்தவாரி உற்சவமும் ஜூன் 22 -வசந்த உற்சவமும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 96775 00586 / 94429 57143.