செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று காலை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது.

DIN

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று காலை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வந்தது. கடந்த திங்கள்கிழமை தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும், செவ்வாய்க்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றன .
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் புதன்கிழமையான நேற்று நடைபெற்றது. 

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி இன்று சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 

வெள்ளிக்கிழமை பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT