செய்திகள்

திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் தொடக்கம் 

DIN

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள, லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை விநாயகர் உற்சவத்துடன் தொடங்கியது. 
பொன்னேரி-பழவேற்காடு சாலையில் உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருப்பாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இதையொட்டி நடைபெற்ற விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து, மார்ச் 21-ஆம் தேதி கொடியேற்றமும், 22-ஆம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபையும், 23-ஆம் தேதி அதிகார நந்தி, 24-ஆம் தேதி பஞ்சமூர்த்தி-ரிஷப வாகனம், 25-இல் நாக வாகனம், 26-இல் யானை வாகனம் ஆகிய சேவைகள் நடைபெறுகின்றன. 27-ஆம் தேதி திருத்தேர் விழாவும், 28-ஆம் தேதி பார்வேட்டை, குதிரை வாகனமும், 29-இல் அம்பலவாணர் திருக்காட்சியும், 30-ஆம் தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம், கொடியிறக்கம், தெப்பல் உற்சவம், பஞ்ச மூர்த்தி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 31-ஆம் தேதி பந்தம் பரி, ஏப்ரல் 1-இல் உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் திருப்பாலைவனம், அதனைச் சுற்றுவட்டார கிராம மக்கள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT