முகப்பு
செய்திகள்

அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதி அறிவிப்பு 

அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதியை அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Updated On : 11 மே 2018, 3:05 pm IST
பகிர்:

அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதியை அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயனி, நாசிக் ஆகிய நகரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலாகாபாத்தில் பூரண கும்பமேளா நடைபெறுகிறது. 

இது தவிர 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாக்களின்போது 
பக்தர்கள் நதிகளில் புனித நீராடுவது வழக்கம்.

Advertisement

Advertisement

அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி ஆகிய மூன்றும் கூடும் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர். 

2019-ம் ஆண்டு ஜனவரி 14/15 மகரசங்கராந்தி முதல் மார்ச் 04-ம் தேதி மகாசிவராத்திரி வரை பக்தர்கள் புனித நீராடலாம் என்று அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கும்பமேளாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments