செய்திகள்

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் 22-ல் வைகாசி விசாகக் கொடியேற்றம்

தினமணி

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும் 22-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. 

முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டு வைகாசி விசாகத் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் சிறப்பு அம்சமாக 27-ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 

28-ம் தேதி வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் சன்னதியில் அதிகாலை 4.00 மணிஙககு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் நான்கு ரத வீதிகளில் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT