ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று தொடங்குகிறது நம்பெருமாள் வசந்த உற்சவம்
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு நம்பெருமான் வசந்த உற்சவம் இன்று தொடங்கி தினமும் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு அங்குள்ள மண்டபத்தின் நடுவே எழுந்தருள்வார்.
விழாவின் 7-ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
Advertisement
28-ம் தேதியன்று விஸ்வரூபசேவை கிடையாது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு.
முன்னதாக நம்பெருமாள் வசந்த உற்சவத்தையொட்டி மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேற்று நீர் நிரப்பப்பட்டது. மேலும் மின் விளக்குகளால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.