முகப்பு
செய்திகள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிச.4-ல் கார்த்திகை பிரம்மோற்சவம் துவக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 

திருமலை தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, இந்தாண்டும் இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்து வருகின்றனர். டிசம்பர் மாதம் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்வுள்ளது. 

விழாவில், டிசம்பர் 8-ல் கஜவாகனமும், 9-ல் தங்கதேரோட்டமும், கருட வாகனமும், 11-ல் ரத உற்சவமும், 12-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிடைவடைகிறது. 

பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.