செய்திகள்

நாச்சியார்கோயில் கல்கருடன் ஆலயத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர புறப்பாடு

குடந்தை ப.சரவணன்

கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் உலக புகழ்பெற்ற கல் கருட பகவான் ஆலயத்தில் நடைபெற்று வந்த ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருநட்சத்திர திருவிழாவின் நிறைவு நாளான நவம்பர் 11 நேற்று, அருள்மிகு பெருமாள் - தாயார் சேஷ வாகனத்திலும், ஸ்ரீமணவாள மாமுனிகள் படிச் சட்டத்திலும் வீதி உலா நடைபெற்றது. இதில் இந்தாண்டு, பழங்கால முறையில், சுமார் 35 வருடங்களுக்குப் பின், 50 நபர்கள் தங்களின் தோள்களில் சுவாமிகளை சுமந்து வீதியுலா வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

- குடந்தை ப.சரவணன் (9443171383)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT