செங்கல்பட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை (நவ. 14) முருகன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறஉள்ளது.
நகரில் உள்ள சக்திவிநாயகர் கோயில், காட்டு நாயக்கன் தெருவில் உள்ள செம்மலை வேல்முருகன் கோயில், அண்ணாநகரில் உள்ள ரத்தினவிநாயகர் கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில், என்ஜிஜிஓ நகரில் உள்ள வரசித்திவிநாயகர் கோயில், மேட்டுத் தெருவில் உளஅள செங்கழுநீர் விநாயகர் கோயில், வ.உ.சிதம்பரனார் தெரிவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரிய நத்தம் கலாசநாதர்கோயில் ஆகியவற்றில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கூட்டுச்சாலை நேரு நகரில் உள்ள வெங்கடேசன் வாசுகி திருமண மண்டபத்தில் கந்தசஷ்டி பெருவிழா திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட உள்ளது.
இதனிடையே, திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலிலும் முருகனுக்கு திருக்கல்யாண உற்வசம் நடைபெறும்.