பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் மீது அனுப்பி வைக்கப்படும் கலசம். 
செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை தீபத் திருவிழா தேரோட்டம்: பஞ்ச ரதங்களுக்கு கலசங்கள் பொருத்தம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீவிநாயகர் தேரோட்டம்: தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் ஸ்ரீவிநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது. 
தேரடி தெருவைக் கடந்து கடலைக்கடை சந்திப்புப் பகுதியை விநாயகர் தேர் கடந்து சென்ற பிறகு, 2-ஆவதாக வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தேர் புறப்படுகிறது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர்: 3-ஆவதாக பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் புறப்படுகிறது. 4-ஆவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீபராசக்தியம்மன் தேரும், 5-ஆவதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன.
பஞ்ச ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன. நள்ளிரவு 12 மணி வரை தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகமான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் உபயதாரர்கள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பருவதமலையில் ஏறிய பக்தா் கீழே விழுந்து உயிரிழப்பு

துறையூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே 3 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

கரூா் புதிய பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்

SCROLL FOR NEXT