செய்திகள்

குரு தோஷம் நீங்க வேண்டுமா? இதைச் சொல்லுங்கள்!

தினமணி

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.

அப்பேர்பட்ட குருவினால் ஏற்பட்ட தோஷம் விலக வேண்டுமென்றால் கீழ்க்கண்ட இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். வியாழக்கிழமைகளில் குருவுக்கு உகந்த முல்லை பூவையும், கொண்டைக் கடலையும் நிவேதனமாகப் படைத்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மேலும் சிறப்பு.

தேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்திமன்தம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
நறை சொரி கற்பகப்பொன் நாட்டினுக்கதிபனாகி
நிறை தனஞ் சிவிகை மண் வீடு போகத்தை நல்கும்
மறையவன் குரு வியாழன் மருமலர்ப் பாதம் போற்றி!​

என்றும் சொல்லாம். 9 அல்லது 108 தடவை சொல்ல குரு பகவான் மகிழ்ந்து தன் தோஷத்தை விலக்கிக் கொள்ளுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT