சீரடியில் மூன்று நாட்களில் ரூ.5.9 கோடி காணிக்கை
மகாராஷ்டிரா சீரடி பாபா கோயிலில் பாபா சாமாதியடைந்த நூற்றாண்டு..
மகாராஷ்டிரா சீரடி பாபா கோயிலில் பாபா சாமாதியடைந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பக்தர்கள் 5.9 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
பாபாவின் புகழ்பெற்ற கோயிலான சீரடியில் பாபா சமாதியடைந்த நூற்றாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த மூன்று நாளில் மட்டும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதில், கோவிலுக்குக் காணிக்கையாக ரூ.5.9 கோடி ரூபாயை பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதில், உண்டியல் வசூல், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை அடங்கும் என்று சாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.